டில்லி,
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என  சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த 24ந்தேதி சிபிஎஸ்சி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டி ருந்தது.

இதற்கிடையில், டில்லி நீதி மன்ற உத்தரவு காரணமாக தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. இயக்குநரகம் தெரிவித்துள்ளதால் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

தேர்வு முடிவுகள் www.cbseresults.nic.in, www.cbse.nic.in  இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வுகளை  சுமார் 11 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியுளள்னர்.