டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை கவுரவிக்கப்படுவார்கள் என்று  தலைமை தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தீவிரத்தையடுத்து தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில் முப்படைகளின் தளபதிகள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்குப்பின் பிபின் ராவத் உள்பட முப்படைகளின் தளபதிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ராவத் கூறியதாவது: கொரோனாவை எதிர்கொள்ள இனி வரும் நாட்களில் அரசோடு இணைந்து முப்படைகளும் கடமையாற்றும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோரை கவுரவிக்க ராணுவத்தின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கப்பல் படைக்கு சொந்தமான கப்பல்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் அணிவகுப்பில் ஈடுபடும். அதில் நிறுத்தப்பட்டுள்ள விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொண்டு மருத்துவமனைகள் மீது மலர் தூவி மரியாதை செலுத்தும்.
அந்த ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது விமான படைக்கு சொந்தமான இன்னுன் சில விமானங்களும் இந்த மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு பயன்படுத்தப்படும். இந்த நிகழ்வு வரும் 3ம் தேதி நடத்தப்படும்.
தரைப்படையின் வழியாக நாங்கள் துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்கள், போலீஸ்காரர்கள், பாதுகாப்பு வீரர்கள், ஊடகத்தினர், வீடுகளுக்குச் சென்று உணவு, அத்யாவசிய பொருட்களை டெலிவெரி செய்பவர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி செலுத்துகிறோம். அதே சமயம் இந்த துறையினர் அனைவருக்கும் கடினமான காலங்களில் உயிரை தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படும் என்று கூறினார்.