டில்லி,

த்துவாக்களின் மிரட்டல் காரணமாக திரையிடப்படாமல் இருந்த பத்மாவதி படத்துக்கு தணிக்கை வாரியம் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

மேலும் பத்மாவதி படத்தின் தலைப்பை பத்மாவத் என பெயரை  மாற்றும்படியும் தயாரிப்பாளருக்கு அறிவுரை கூறி உள்ளது.

சித்தூர் ராணி பத்மினியின் கதையினை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக படமாக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இயக்க, நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே தலையையோ அல்லது படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து படத்தின் வெளியீடு தேதியை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

இத்திரைப்படம் குறித்து தொடர்ந்து பல சர்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு U/A சான்றிதழினை டில்லி திரைப்பட தனிக்கை குழு அளித்துள்ளது.

மேலும் பத்மாவத் என்று பெயர் சூட்டுமாறும் படத்தயாரிப்பாளருக்கு பரிந்துரைத்துள்ளது.

தற்போது தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துள்ளதால், படம் சர்ச்சைக்குரிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.