சென்னை:

திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

பின்னர் இது குறித்து ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நீட் தேர்வு எழுத மாணவர்களை அழைத்துச்சென்ற பெற்றோர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை கைது செய்ததை கண்டித்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 15-ம் தேதி மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். 14-ம் தேதி நல்ல முடிவு வரவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். இதில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் ஆடுகின்றன. கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’’ என்றார்.