டில்லி:

மிழகத்தை  சுடுகாடாக  மாற்ற திட்டமிட்டு முயற்சி எடுத்து வரும் மத்திய பாஜக அரசு, தற்போது புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான  ஆய்வு மேற்கொள்ள, ஏற்கனவே தூத்துக்குடியை நாசமாக்கிய வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் டெல்டா பகுதியான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வழங்கிய அனுமதி எதிர்த்து மக்கள் சில ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற் கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கடந்த ஆண்டு கையெழுத்தானது.

அதன்படி,  “நில ஆய்வு செய்யப்படாத 59,282 சதுர கி.மீ. பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேதாந்தா நிறுவனம் உள்பட பல நிறுவனங்களுடன் மத்திய அரசு கைகோர்த்துள்ளது.

இந்த திட்டத்தில்  தூத்துக்குடியின் ஸ்டெர் லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கு 55 இடங்களில்  41இடங்களை ஒதுக்கி உள்ளது. இதில் 3 இடங்கள் தமிழகத்தில் உள்ளன.

புதுச்சேரியின் காரைக்காலில் தொடங்கி தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை ஒட்டிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் ஹைட்ரோகார் பன் எடுக்க வேதாந்தாவுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன.

இதுதவிர, பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சிதம்பரத்தை ஒட்டிய நிலப்பகுதியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் பணிகளை மேற்கொள்ளு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமை வழங்கியுள்ளது மத்திய அரசு . இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைத்து, அந்த பகுதி மக்களை பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கி, அந்த பகுதியை சுடுகாடாக மாற்றி வரும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் முலம் புதுச்சேரி முதல் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை பாழாக்க களமிறங்கி உள்ளது.