புதுடெல்லி:
சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் என்ஐஏ விசாரணை நடத்துகிறது. பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடைய வழக்குகளி​லும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.