டெல்லி: டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம்  தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே விவசாயிகள் மத்தியஅரசுக்கும் இடையே நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையிலாவது உடன்பாடு ஏற்பட்டு, விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியாணா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியில் கடந்த 27-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். டெல்லி புறநகர் பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் டெல்லி முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில்,  35-க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லைமுடிவு எட்டப்படாத தால் இன்று 2வது கட்ட பேச்சு வார்த்தைக்கு  நடத்தப்பட உள்ளது.

அதுபோல   போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 30 பெரிய விவசாய சங்கங் களின் தலைவர்கள் நேற்று பிற்பகல் ஆலோசனை நடத்தினர்.  இதுகுறித்து கூறிய  கிராந்திகாரி கிசான் விவசாய சங்கத் தின் தலைவர் தர்ஷன் பால்,  விவசாயிகளின் போராட்டத்துக்கு  தீர்வு காணும் வழியை ஆராயாமல் எங்களுக்குள் சிண்டு முடியும் வேலையில் மத்தியஅரசு  ஈடுபட்டுள்ளது.
பஞ்சாப் பை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே போராட்டம் நடத்துவது போன்ற மாயபிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. இது, விவசாய சங்கங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி யாகும். இந்த கீழ்த்தரமான வியூகத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு பஞ்சாப் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களையும் அரசு அழைக்க வேண்டும். எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் வேளாண் சட்டங்களை நீக்குவது மட்டும்தான் எங்கள் கோரிக்கையாக இருக்கும். எனவே. அந்த சட்டங்களை அரசு உடனடியாக நீக்க வேண்டும். இதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் இனியும் காலம் தாழ்த்தினால் இது நாடு தழுவிய போராட்டமாக வெடிக்கும் என எச்சரித்தார்.