சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதி மகனுமான மு.க.அழகிரிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது.

 

கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் அழகிரி அமைச்சராக இருந்தார். அப்போது முதல் அழகிரிக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது திடீரென போலீஸ் பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. மாநில அரசின் சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.