டில்லி

த்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இதன் ஒரு பகுதியாகப் பல மாநிலங்களில் பணி இடங்கள் மூடப்பட்டுள்ளன.  இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இவர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு உதவி அளிக்கும் எனப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.  இதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளி வந்தன.  இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ”கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை சுகாதார பணிகளுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு முதல் கட்டமாக ரூ.2570 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.  இதில் தமிழகத்துக்கு ரூ. 987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு ரூ.431 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.