டில்லி

பொருளாதார மந்த நிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க எண்ணுவதாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

சமீப காலமாக இந்தியப் பொருளாதாரத்தில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. பல நிறுவனங்களில் குறிப்பாக ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் உற்பத்தியும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்து மாதத்திற்கு 10 நாட்களுக்கு மேலாக விடுமுறை அளித்து வருகின்றன.

இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அந்தப் பதிவில் பிரியங்கா, “பொருளாதாரத்தை  முன்னேற்றம் செய்ய நடவடிக்கை எதுவும் மோடி தலைமையிலான அரசு எடுக்கவில்லை.

இதையொட்டி பல தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

ஒரு சில ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை அளித்து வருகிறது.  ஆனால்  இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” எனக் குற்றம் சாட்டி உள்ளார்.