டில்லி

ர்நாடகாவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவால் மரணம்  அடைந்துள்ளார்.

கொரோனாவால் உயிர் இழக்கும் பிரபலங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் அங்காடி மத்திய ரயில்வே இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.

இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து  அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுரேஷ் அங்காடி இன்று சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் இழந்தார்.

இவர் கொரோனாவால் உயிர் இழந்த கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.