டெல்லி: அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் கொரோனா தடுப்பூசிக்கான பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும், மறுபக்கம் பாதிப்புகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
குறிப்பாக நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் பங்கு அதிகமாகும். கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம்.
இந் நிலையில், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உயர்மட்டக் குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது. மத்திய சுகாதா அமைச்சகமானது இந்த குழுக்களை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மருத்துவ மேலாண்மை ஆகியவற்றை இந்த குழு மேலும் வலுப்படுத்தும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
நோய் தொற்றறிதல், அதன் சவால்கள் ஆகிய பணிகளில் மாநில அரசுகள் திறம்பட நிர்வகிக்கும் வகையில் இந்த குழு வழிகாட்டும் என்றும் சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.