சென்னை: எத்தனை சவால்கள் இருந்தாலும், கொரோனா காலத்திலும் சென்னை போலீசார் கடமையில் கண்ணும், கருத்தாக இருந்திருக்கின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் குறையவில்லை. கிட்டத்தட்ட 4ம் கட்ட ஊரடங்கை நோக்கி இந்தியா இருக்கிறது. இந்த தருணத்தில் தமிழக காவல்துறையின் பணி அசாத்தியமானதாக இருக்கிறது.
உயரதிகாரிகளுக்கே கொரோனா இருந்தாலும் கடமை தவறாது காவல்துறை பணியாற்றி வருகிறது. அதில் ஒருவர் தான் ரவி. 58 வயது நிறைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர். இந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெறவிருந்தார். இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக, தமிழக அரசானது, அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 58லிருந்து 59 ஆக அதிகரித்தது.
இதன் காரணமாக ரவி இன்னும் ஒரு வருடம் பணியாற்ற வேண்டியிருக்கும். இருப்பினும், அவர் அதைப் பற்றி எந்த கவலையும் கொண்டிருக்கவில்லை. அவர் கூறியதாவது: இதுபோன்ற சவாலான, அவசியமான நேரத்தில் நான் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போதைய நிலைமையில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. எங்கள் உயரதிகாரிகள் எங்களுக்கு பக்க பலமாக இருக்கின்றனர். குறிப்பாக எங்களை போன்ற 50 வயதிற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு. நாங்கள் நன்கு ஓய்வெடுக்கிறோம் என்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள், மேலும் நாங்கள் மக்கள் பணிகளில் இருப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள் என்றார்.
3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 114 போலீசார் சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஆனாலும் ரவி போன்ற அதிகாரிகள் இன்னமும் மக்களுக்கான சேவைகளில் ஈடுபடுகின்றனர். நாங்கள் வைரஸை பற்றி தொடர்ந்து சிந்தித்தால், எங்கள் வேலையைச் செய்ய முடியாது. வெளியில் இருந்து தேநீர் கூட குடிக்க நாங்கள் பயப்படுகிறோம், வேறு என்ன செய்ய முடியும்? போலீஸை பொறுத்தவரை கடமை தான் முதலில் என்று ரவி மேலும் கூறினார்.

இதேபோன்ற கருத்தை தான் 24 வயது இளம் போலீஸ் கான்ஸ்டபிள் சாய்ராமும் பிரதிபலிக்கிறார். எங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை, ஆனால் இடையில் எங்களுக்கு 1.5 நாட்கள் ஓய்வு கிடைக்கிறது. எனது தந்தையும் காவல்துறையில் இருக்கிறார், அவர் 55 வயது. எனவே அவர் இந்த பாதுகாப்பு பணியில் களமிறங்கவில்லை. நிலைமை தீவிரமானது என்பதால் நாங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டும். மருத்துவமனைக்குள்ளேயே இருந்தாலும், கட்டுப்பாட்டு மண்டலத்திலோ அல்லது வாகன சோதனைச் சாவடியிலோ இருந்தாலும் எங்களுக்கு கடமை, கடமை தான்.
ரவியும், சாய்ராமும் வெளிப்படுத்திய கருத்துகள், உணர்வுகள் பெரும்பாலும் சென்னையில் உள்ள காவல்துறையினரின் எண்ணங்களாகும். சென்னை கொரோனா வைரஸ் தொற்றானது 4800க்கும் அதிகமாக உள்ளது. 690 கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கொண்டிருப்பதால், எந்தக் கட்டத்திலும் தங்கள் பாதுகாப்பைக் குறைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
காவல்துறையில் அனைவருக்கும் வழிகாட்டும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன். லாக்டவுன் அறிவிக்கப்பட்டதிலிருந்து, கமிஷனர் தொடர்ந்து ஆய்வுக்குச் சென்று வருகிறார். இது குறித்து அவர் தந்த பிரத்யேக நேர்காணல்:

கே: கொரோனா வைரஸ், லாக்டவுன் இவ்விரண்டும் இதற்கு முன்பு அறிந்திராத ஒன்று.  நீங்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள் யாவை?
ப: சுகாதாரம், வருவாய், கார்ப்பரேஷன் போன்ற பிற துறைகளைப் போலவே நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். இது நம் அனைவருக்கும் முன் இருக்கும் ஒரு சவால்.  லாக்டவுனை செயல்படுத்துதல், கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்வகித்தல், தொடர்புகளை கண்டறிதல் என அனைத்துமே எங்களுக்கு புதிய சவால்கள். இவை அனைத்திலிருந்தும் மிகப்பெரிய பிரச்சினை, பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகாத வகையில் லாக்டவுனை செயல்படுத்துவதாகும்.
கே: சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காவல்துறை அதிகாரிகளும் பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கின்றனர். இப்போது சென்னை காவல்துறையின் மன உறுதியும், கமிஷனருமான உங்கள் மன ஓட்டம் என்ன?
ப: அதிர்ஷ்டவசமாக சோதனை செய்த காவல்துறை அதிகாரிகள் யாரும் மோசமான நிலையில் இல்லை. அவர்கள் விரைவில் எங்களுடன் நலன் பெற்று திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன். காவல்துறை எப்போதும் களத்தில் இருக்கும். ஆபத்துக்களுக்கு மத்தியில் நாங்கள் வேலை செய்கிறோம். நாங்கள் களத்தில் இருக்கிறோம், எல்லா நேரங்களிலும் ஒரு சூழ்நிலையிலோ அல்லது மற்றொன்றிலோ கலந்துகொள்கிறோம். களத்தில்  உள்ள அதிகாரிகள் ஆபத்து பற்றி யோசிக்கவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாங்கள் அவர்களை கடமையில் அமர்த்தினாலும் அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்த காவல்துறை தலைவராக அந்த விஷயத்தில் நான் பெருமைப்படுகிறேன்.
கே: நீங்கள் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள், இந்த சூழ்நிலையை கையாள்வது குறித்து உங்கள் அதிகாரிகளுக்கு என்ன ஆலோசனைகளை வழங்கியுள்ளீர்கள்?
ப: நாங்கள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். முகமூடிகள், கையுறைகள் மற்றும் பிற பிபிஇக்களை அணிய வேண்டியது கட்டாயமாகும். அனைத்து காவல் நிலையங்களும் போலீஸ் குடியிருப்புகளும் தவறாமல் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. தங்களையும் அவர்களது குடும்பத்தினரையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது பற்றியும் விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம்.
கே:  இத்தனை நாட்களாக இந்த லாக்டவுனை எப்படி செயல்படுத்த முடிகிறது.
ப: நாங்கள் பல சவால்களை சந்தித்து வருகிறோம். மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். ஆனாலும் அவர்களில் சிலர் விதிகளை மீறுகின்றனர்.
கே: தற்காலிக பணியாளர்கள் ஓய்வின்றி இருக்கின்றனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டிருக்கிறோம். நீங்கள் சமீபத்தில் அவர்களைச் சந்தித்தீர்கள், தற்போதைய நிலைமையைப் பற்றி விளக்க இந்தியில் அவர்களுடன் பேசினீர்கள்.
ப: ஆமாம், தொழிலாளர்கள் பயண ஏற்பாடுகளை கோரி போராட்டத்தை நடத்திய சில நிகழ்வுகளை நாங்கள் எதிர் கொண்டோம். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் அனுப்பும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அவர்களில் சிலர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். மற்றவர்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கே: அனைவரிடமும் களத்தில் இருந்து பணியாற்றுகிறீர்கள். நேரிடையாக சென்று பேசுகிறீர்கள். இதைச் செய்ய உங்களைத் தூண்டியது எது?
ப: ஒவ்வொரு காவலரின் அடிப்படை உள்ளுணர்வு என்பது களத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். அதுதான் நமக்கு வழிகாட்டுகிறது. நான் களத்திற்குச் செல்கிறேன், ஏனென்றால் அவர்கள் அனைவரும் பணிபுரியும் நிலைமைகளை நானே ஊக்குவிக்க விரும்புகிறேன் என்றார்.