லண்டன்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட் 71 ரன்களும், பின்ச் 68 ரன்களும், சுமித் 56 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசிய மார்க் வுட் மற்றும் ரஷீத் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.