லண்டன்:

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான பங்களாதேசமும் மோதின. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் 95 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 44.3 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்த பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஸம்பா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.