மிழகம் உட்பட தென்னிந்திய பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் வகையில் கன மழை பெய்யும் என்று  பிபிசி வானிலை பிரிவு எச்சரித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்து  பிபிசி வானிலை பிரிவு அறிவித்த்து. அது போலவே,  கனமழை பெய்து, சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. ( ஏரியைத் திறந்துவிட்டது காரணம் என்றாலும் மழையும் முக்கிய காரணம்.)

உயிரிழப்புகளும், பெரும்  பொருட்சேதமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில்  பிபிசி வானிலை செய்திப்பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட தென்னிந்த பகுதி மற்றும் இலங்கையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்த்து.

அதோ போல கன மழை, சென்னை உட்பட தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெய்தது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பிபிசி வானிலை செய்திப்பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி வெள்ளம் ஏற்படும் அளவுக்கு தென் இந்தியாவிலும், கிழக்கு இந்தியாவிலும் அதிக மழை கொட்ட கூடும்” என எச்சரித்துள்ளது.