சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்  6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆகிய  6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.