சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில்  அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  சென்னை உள்பட சில மாவட்டங்களிலும், கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களிலும், மழை பெய்து வருகிறது. தற்போது, தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானில ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறைக்காற்று வீசும் எனபதால், ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.