சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட  5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ள்து.

பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது

அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ, பெரியகுளத்தில் 10 செ.மீ, தல்லாகுளத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டு உள்ளது.