நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின்னணியில் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர் என சுஷாந்த் தந்தை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுஷாந்த்தின் நண்பர் சித்தார்த் பிதானி சுஷாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள் அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் தனக்கு அனுப்பியதாக சில வாட்ஸப் மெசேஜ்களை மும்பை போலீஸாரிடம் ஒப்படைத்தார். மேலும் அந்த மெசேஜ்களை கடந்த பிப்ரவரி மாதம் சுஷாந்த்துக்கும் அனுப்பியுள்ளார் சித்தார்த்.

இந்நிலையில் சுஷாந்த் குடும்ப வழக்கறிஞரான விகாஸ் சிங் :

பிதானி சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். ரியா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு ரியா குடும்பத்தினருக்கு உதவி செய்ய முயற்சி செய்துள்ளார். ரியாவுக்கு அவர் எழுதிய இ மெயிலை வைத்து இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் சுஷாந்த் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு புத்திசாலித்தனமான கிரிமினல் என கூறியுள்ளார் .