SJ சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை,இறவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இதனை தவிர உயர்ந்த மனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மொழி,பயணம்,காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் SJ சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார்

செப்டம்பர் இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்கப்படும் என கூறியுள்ளார் ராதாமோகன் .

இந்தப் படத்திற்கு ‘பொம்மை’ என தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ‘பில்லா பாண்டி’ திரைப்படத்தில் ஆர்.கே சுரேஷிற்கு ஜோடியாக நடித்த சாந்தினி தமிழரசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.