சென்னை:
த்திரபதிவு செய்தவுடன், தானாகவே  பட்டா மாறும் திட்டம் ஆகஸ்டில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில், திட்டமிட்டபடி இந்த புதிய நடைமுறை ஆக. 1ம் தேதி முதல் அமலுக்கு வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப் படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும். அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார் பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இதை தடுக்கும் வகையில்,   பத்திர பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தவதாக  தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதுதொடர்பாக அப்போதைய பத்திரப்பதிவு துறை தலைவர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்திருந்தார்.
அதன்படி,  இனி வருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு மக்களிடையே வரவேற்பை பெற்றது. ஆகஸ்டு முதல் நடைமுறைக்கு வருவதாகவும்,  சோதனை முறையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருவதாக கூறப்படுகிறது.  ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.
இந்த புதிய திட்டத்தின்படி,  சார்பதிவாளர்கள்  சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.. அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை இனி தேவையில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால்,   பழைய பத்திரங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என கூறப்படுகிறது.
புதிய பத்திரங்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருந்தும் என்றும் சொல்லப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 1ம்தேதி நடைமுறைக்கு வரும் போது அந்தந்த பத்திர அலுவலங்களில் விரிவான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பத்திரப்பதிவுத்துறை அதிகாரி, தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.