இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் ‘டாக்டர்’ .
இந்தப் படத்தின் மூலம் தமிழில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், யோகி பாபு, இளவரசு, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது .
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது .

இந்த படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.டிக்டாக் தடை குறித்து இந்த ஜாலியான பாடல் உருவாகவுள்ளது என்று தெரிகிறது.இந்த பாடலின் அறிவிப்பை தங்கள் ஸ்டைலில் ஒரு ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.அத்துடன் பாடல் ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளனர்.