சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக,  செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டியதால், 5 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேறிய நீரால், அதனை ஒட்டிய குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு 3,307 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு வினாடிக்கு 6,200 கன அடி வீதம் நீர் வருகிறது. புழல் ஏரியின் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்ததால், உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.