சென்னை:

சென்னை விமானநிலையத்தில் போர்த்துகீசிய நாட்டை சேர்ந்த மெண்டிஸ் அபோன்சோ டொமிங்காஸ் என்பவரிடம் இருந்து 1,800 கிலோ கோகைன் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவர் ஷா பாலோ நகரில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்துள்ளார்.

சுற்றுலா விசாவில் சென்னை வந்த இவர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கி கொண்டார். கோகைன்களை 6 உணவு கேன்களில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.