சென்னை

சென்னையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று வரை 37 பேர் கொரோனாவால் உயிர் இழந்திருந்தனர்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் 66 வயதான கோயம்பேடு வியாபாரி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

அதைத் தவிர ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாம்பரத்தைச் சேர்ந்த 77 வயது முதியவர் கோரோனாவால் உயிர் இழந்துள்ளார்.

சென்னை கே எம் சி மருத்துவமனையில் சூளை மேடு பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளார்.

ஒரே நாளில் சென்னையில் மூவர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளதால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.