சென்னை: சென்னையில் இன்று 989 பேருக்கு புதியதாக தொற்று உறுதியாகி உள்ளதால்,  இதுவரை  கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,048 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.   சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,13,058-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1070 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை  99.806 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் , 10,868 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,384 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இவ்வாறு  தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.