சென்னை:
சென்னை  மாநகராட்சி 21வது வார்டு அதிமுக  கவுன்சிலர் முல்லை ஞானசேகர் இன்று மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.
சென்னை மாநகராட்சி 21 வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் முல்லை ஞானசேகர்(50). மணலி எட்டியப்பன் பகுதியை சேர்ந்தவர்.  இவர் திருவொற்றியூர் நகர அதிமுக அவைத்தலைவராகவும் இருந்து வந்தார். இவர், தினமும் பாடசாலை தெருவில் ஒரு கடைக்கு வருவார்.
இன்று மாலையும் அதே கடைக்கு வந்து, கட்சிக்காரர்களிடம்  பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மூன்று நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு,  தப்பி ஓடி விட்டனர். ஞானசேகர், சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

முல்லை ஞானசேகர்
முல்லை ஞானசேகர்

தகவலறிந்து வந்த மணலி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.   வெட்டி விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை மடக்கி பிடிக்க சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லை ஞானசேகருக்கும் அப்பகுதி திமுகவினருக்கும் நேற்று அம்மா திட்ட முகாமில் கட்சிக்கொடி கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி விரோதத்தால் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.