சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளதாவது: இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும்.

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின்னரே இதர மாணவர்களுக்கான தேர்வுகள் பின்னர் துவங்கும். விரிவான அட்டவணை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.