சென்னை: சென்னை, பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல்,பெங்களூரு இடையே இரண்டடுக்கு ஏசி அதிவேக சிறப்பு ரயில் நாளை முதல் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தை பிற்பகல் 1.10 மணிக்கு சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதே போல, கேஎஸ்ஆர் பெங்களூரு, சென்னை சென்ட்ரல் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06076) நாளை முதல் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, பெரம்பூர், வழியாக அன்றிரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும் என்றும் தெரிவித்து உள்ளது.