துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி.
டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது சென்னை அணி. இதனால், முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை அடித்தது.
பின்னர், சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில், துவக்க வீரராக களமிறங்கியவர் ஃபார்மில் இல்லாத ஷேன் வாட்சன். அவர் 19 பந்துகளில் 14 ரன்களே அடித்தார்.
ஆனால், மற்றொரு துவக்க வீரர் ருதுராஜ், 53 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 72 ரன்களை விளாசினார். அம்பதி ராயுடு 20 பந்துகளில் 38 ரன்களை வெளுத்தார்.
ரவீந்திர ஜடேஜா, 11 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களை விளாசி, வெற்றியை உறுதிசெய்தார்.
இத்தொடர் முழுவதுமே தண்டமாக ஆடிவரும் கேப்டன் தோனி, 4 பந்துகளை சந்தித்து 1 ரன் அடித்து வெளியேறினார்.
கொல்கத்தா அணி சார்பில் பெர்குசன் 4 ஓவர்கள் வீசி, விக்கெட் எதுவும் எடுக்காமல் 54 ரன்களை வாரி வழங்கினார்.