சென்னை

சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை புத்தகக் கண்காட்சி  நடைபெற உள்ளது.

கோப்புப் படம்

வருடம் தோறும் புத்தக வாசகர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கமாகும்.  இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் புத்தகக் கண்காட்சி நடைபெறாது என ஒரு வதந்தி கிளம்பியது.  அதற்கேற்றாற்போல் வழக்கம் போல் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை.

இந்நிலையில் தென் இந்தியப் புத்தக வியாபாரிகள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் இந்த வருடம் புத்தகக் கண்காட்சி நடைபெறும் தேதியை அறிவித்துள்ளனர்.  இது புத்தக ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தாமதமாகத் தொடங்கினாலும் கண்காட்சி சிறப்பாக நடைபெறும் என சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கும் புத்தகக் கண்காட்சி மார்ச் 9 வரை நடைபெற உள்ளது.  இந்த கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி அகலமான பாதைகளுடன் அரங்கம் அமைக்கப்பட உள்ளதாகவும் டிக்கட் உள்ளிட்டவை வழக்கம் போல இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.