சென்னை: உள்ளூர் கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐ-லீக் போட்டிகளில், சென்னை சிட்டி அணி, மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

தற்போதைய ஐ-லீக் கால்பந்து தொடரில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனாக உள்ளது சென்ன‍ை சிட்டி அணி.

இந்த அணி, தனக்கான நான்காவது லீக் போட்டியில், மணிப்பூரின் வடகிழக்கு சங்க அணியை சந்தித்து. சென்னை சிட்டி அணியின் சொந்த மண்ணில் போட்டி நடந்தது.

ஆட்டத்தின் 26வது மற்றும்31வது நிமிடங்களில் சென்னை சிட்டி அணி கோல்கள் அடித்து ஆட்டத்தில் முன்னிலைப் ப‍ெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

ஆனால், முதல் பாதி ஆட்டத்தின் ஸ்டாப்பேஜ் நேரத்திலும், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 65வது நிமிடத்திலும் மணிப்பூர் அணி கோல் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது.

பின்னர், முன்னிலை பெறுவதற்கு இரு அணி வீரர்கள் எடுத்த முயற்சிகளும் வெற்றியடையாததால், ஆட்டம் கடைசியில் டிராவில் முடிந்தது.