சென்னை:

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் இருந்தார். இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.