சென்னை: சென்னையில், இன்று 1285 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று 1285  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,33,173 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,159 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 1,16,808 பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.  13,653 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் இன்று ஒரு நாளில் 17 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக பார்த்தா, 2,712 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.