சென்னை: கொரோனாவுக்கு எதிராக போராட உதவ நினைப்பவர்கள் வரலாம் என்று சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்கள் சென்னை மாநகராட்சி சொந்தமான சமுதாய நலக்கூடம் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்யாவசியமான தேவைகளை அளிப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இவர்களுக்கு உதவ நினைக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

எந்த நிறுவனமாக யாராக இருந்தாலும் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து நேரடியாக தங்களால் இயன்றதை செய்யலாம். கட்டுப்பாட்டு அறை எண் 1913 என்ற எண்ணிற்கோ அல்லது 044-25384520 என்ற எண்ணிற்கோ தொடர்புகொண்டு கொடுக்கலாம்.

மேலும் பொருட்களாக கொடுக்க நினைப்பவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், பால் பவுடர் சாம்பார், ரசப் பொடி, நாப்கின், கோதுமை மாவு, சோப்பு போன்றவற்றை கொடுக்காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.