சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த கஞ்சா விற்பனை பிரபல ரவுடி சங்கர் நள்ளிரவில் என்கவுண்டர் செய்யப்பட்டார். அயனாவரம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் தலைமையில் போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர்.

பிரபல ரவுடியான ரவுடி சங்கர் மீது பல்வேறு கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளன.  மேலும் அந்த பகுதியில் மாமூல் வசூலித்தல், கட்டப்பஞ்சாயத்து என அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, அவரை பிடிக்க காவல்துறையினர் திட்டம் தீட்டி வந்தனர். ஆனால், அவர், காவல்துறையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, ரவுடி சங்கரை பிடிக்க அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான தனிப்படை அடைத்து அவரை பிடிக்க தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அயனாவரத்தில் பதுங்கி இருந்த ரவுடி சங்கரை பிடிக்க முயன்றனர். அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஆய்வாளர் நடராஜன்

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ரவுடி சங்கர் வெட்டியதால் படு காயமடைந்த காவலர் கீழ்ப்பாக்கம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.