முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கதையை வைத்து படம் எடுக்கும் 3 இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்னான் மகளான ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தலைவி என்னும் பெயரிலும் , பிரியதர்ஷினி இயக்கத்தில் The Iron lady என்ற பெயரிலும் Queen என்ற வெப் சீரிஸை இயக்குநர் கெளதம்மேனனும் இயக்குகிறார்.

இந்நிலையில் தற்போது குறித்து மூன்று இயக்குநர்களிடமும் ஜெயலலிதா கதையை குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி ஜெ.தீபாவின் கவனத்துக்கு மேற்படி இயக்குனர்கள் படங்களின் கதை அளித்து, அவரது ஒப்புதலை பெற்ற பின்னரே படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.