சென்னை: அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து பட்டியலிட ஆணையிடப்பட்டது.

மேலும் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து, பாலகுருசாமி வழக்கில், ஏஐசிடிஇ மற்றும் யுஜிசிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதில் தர உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கையும் ஒத்தி வைத்து உள்ளது.