சென்னை:

ஐஜி.பொன் மாணிக்கவேலை தமிழக அரசு, பணி மாற்றம் செய்துள்ள நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல்தான் விசாரிக்க வேடும் என  ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த பொன் மாணிக்கவேலை கடந்த ஜூன் 30ந்தேதி தமிழக அரசு ரயில்வே ஐ.ஜியாக பணி மாற்றம்  செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சிலை கடத்தல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளையும் ரயில்வே ஐஜியாக மாற்றப்பட்ட பொன். மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அவருக்கு தேவையான அதிகாரிகளை தமிழக அரசு தர வேண்டும் என்றும், சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் கும்பகோணம் நடுவர் நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரிக்க வேண்டும்.

அதுபோல போலீசார் சிலை கடத்தலில் ஈடுபட்ட வழக்கையும் பொன். மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.