ஷார்ஜா: ராஜஸ்தான் நிர்ணயித்த 217 என்ற மெகா இலக்கை விரட்டிவரும் சென்னை அணி, 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

தற்போதைய நிலையில், அந்த அணி 28 பந்துகளில் 81 ரன்களை அடிக்க வேண்டிய அசாதாரண நிலையில் உள்ளது.

அந்த அணியில், எதிர்பார்த்த பெரிய இன்னிங்ஸை யாரும் இதுவரை கொடுக்கவில்லை. ஷேன் வாட்சன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

துவக்க வீரர் முரளி விஜய், 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்து இந்தமுறையும் சொதப்பினார். தற்போது, கேப்டன் தோனியும், டூ பிளசிஸ்சும் ஆடி வருகிறார்கள். டூ பிளசிஸ் 25 பந்துகளில் 36 ரன்களை எடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில், ஏதேனும் பெரிய ஆச்சர்யம் நிகழ்ந்தால் ஒழிய, சென்னை அணி வெற்றி பெறுவது கடினமே..!