சென்னை

சென்னையில் இருந்து கோவை வரை செல்லும் சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் டிசம்பர் 2 முதல் நிறுத்தப்படுகிறது.

தென்னக ரயில்வே சென்னை முதல் கோயம்புத்தூர் வரை சதாப்தி சிறப்பு ரயில் சேவையை நடத்தி வருகிறது.   இந்த சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் நடைபெற்று வருகிறது.   இந்த ரயில் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி தென்னக ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “ரயில் எண் 06027/06028 சென்னை சென்டிரல் – கோவை சென்னை சென்டிரல் செல்லும் வாரத்துக்கு 6 நாட்கள் இயங்கும் சதாப்தி சிறப்பு ரயில் சேவை அதிகம் பேர் பயன்படுத்தாததால் நிறுத்தப்படுகிறது.

இந்த ரயில் சேவை இரு புறங்களிலும் இருந்து வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.  இந்த ரயில் சேவை இறுதியாக நவம்பர் 30 அன்று இயங்கும்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.