சென்னை:

ட்டப்பகலில் புர்கா அணிந்த இளைஞர் ஒருவர்  இளம்பெண்ணை கிஸ் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை பிடித்த பொதுமக்கள் செம மாத்து மாத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக தனது காதலை நிரூபிக்கும் வகையில் அந்த இளைஞர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். ஐடிஐ படித்து வருகிறார்.  ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  சம்பவத்தன்று, அவர் ஷூ அணிந்திருந்த நிலையில் புர்காவும் அணிந்திருந்தார். இதன் காரணமாக அவரின் தோற்றத்தை கண்ட சிலர், இவர், சங்கிலி திருடனாக இருக்கலாம் என சந்தேகம் கொண்டனர்.

சம்பவத்தன்று சென்னை மெரினா கடற்கரையில் அவர் ஒரு பெண்ணுக்கு அவர் முத்தம் கொடுத்தார். இதைக்கண்ட பொதுமக்கள், திருடன் திருடன் என கூச்சல்போட, அருகில் இருந்தவர்கள் அவரை அடித்து, துவைத்து காவல் துறையினரிம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், தான் முத்தம் கொடுத்தது தனது காதலி என்றும்,  தனது காதலிடம் முத்தம் பெறுவதற்காக, அவர் கூறியபடி  சவாலை ஏற்று புர்கா அணிந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை  காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.