சென்னை,

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கில் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் அதிகப்பட்சமாக 31 செ.மீ மழையும்,  பரங்கிப்பேட்டை 26 செ.மீ பதிவாகியுள்ளது

செம்பரம்பாக்கம் – 18 செ.மீ, மீனம்பாக்கம் – 17 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும்,  தமிழகத்தில் 16 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும்,  21 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது என ‘கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு

சென்னை 168.7 மிமீ

கடலூர் 140 மிமீ

நாகை 95.2 மிமீ

தஞ்சை 38.6 மிமீ

புதுவை 38.3 மிமீ