உலகமே லாக்டவுன்-இல் அடைபட்டு கிடக்கும் இவ்வேளையில், பிரபல பாடகி சுச்சி மட்டும் தனி வழியை உருவாக்கி கொள்கிறார் .
ஆம் மீண்டும் 98.3 மிர்ச்சியில் இணைகிறார் சுச்சி .இதற்கு முன்பே மிர்ச்சியில் வானொலி தொகுப்பாளினி ஆக இரண்டு முறை இருந்துள்ளார்.
ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்த அதே சமயத்தில் தான் மே மாதம் 98இல், உயிரின் உயிரே போன்ற பாடல்கள் பயங்கர ஹிட் அடித்து அவரை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றது.
சுமார் 12 வருடங்கள் கழித்து அதே காலை நேர நிகழ்ச்சியான ஹாய் சென்னையை மிர்ச்சியில் தொகுத்து வழங்க தயாராகி விட்டார் சுச்சி .
தற்போது சுச்சி இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களில் சுச்சி குக்ஸ், மியூசிக் கவர் போன்றவற்றை வெளியிட்டு பிஸியாக உள்ளார்.