சென்னை: கொரோனா தாக்கத்தால் சென்னையில் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக தமிழத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதிகபட்ச பாதிப்புகளுடன் சென்னையே முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 47,650 கடந்துள்ளது.

முன் களப்பணியாளர்களாக கருதப்படும் காவலர்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்றோடு 1005 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் குணமடைந்து, 410 பேர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

காவல்துறையில் முதல் கொரோனா வைரஸ் உயிரிழப்பும் சென்னையில் தான் நடந்துள்ளது. மார்ச் தொடக்கத்தில் இருந்து கணக்கிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1500ஐ எட்டியுள்ளது.