சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக, கேரளாவுக்கு விசாரணை நடத்த தனிப்படை செல்லவிருக்கிறது.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா, சில நாட்களுக்கு முன்பு விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக பாத்திமாவின் செல்போன், அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை போலீசார் கருதுகின்றனர். அதற்காக, அந்த போனை அவர்கள் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்கனவே, பாத்திமாவின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, அவரது தாயார், சகோதரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கின்றனர்.


ஏற்கனவே, குற்றம்சாட்டப்பட்ட 3 பேராசிரியர்களிடம் போலீசார் முதற்கட்டமாக விசாரித்துவிட்டனர். தற்போது, பாத்திமா குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதால் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.