சென்னை:

டுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மார்ச் 23 தேதியிட்ட சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் அரசு ஆணை -152 யின் படி, கொரோனா தொற்றுநோயைப் பரப்புவதைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் மற்றும் சமூக விலகல் ஆகியவற்றின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் நோய் சட்டம் 1897 இன் 2 மற்றும் அதன் விதிமுறைகள், பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களைக் கூட்டுவதைத் தடை செய்வது கட்டாயமாகி விட்டது என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இப்போது தமிழ்நாடு நகர காவல்துறை சட்டத்தின் 41 வது பிரிவின் கீழ், அடுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் மே மே 28 அன்று மதியத்துடன் முடிவடைகிறது என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், ஆணையர் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும் எந்தவொரு கூட்டம் அல்லது ஊர்வலம் மற்றும் மனித சங்கிலிக்கு இந்த உத்தரவு பொருந்தாது.