IMG-20160517-WA0001
கோடை வெயிலை போககும் விதமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் இந்த மிதமான மழைக்கே, மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.
ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் இன்று பெய்த மழையில்  சாலையில் கிடந்த கேபிளில் மின்சாரம் பாய்ந்த நிலையில் அதை மித்த  பசுவும் கன்றும் பலியாகின. நல்வாய்ப்பாக மாடுகளை ஓட்டிச் சென்ற பால்காரர் தப்பித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையின் போது, மின் கசிவால் சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் பலர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.