சென்னை:

மெரினா கடற்கரையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில்  வெள்ளம் புகுந்த்தால் தரை தளத்தில் வாழும் மக்கள் பலர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்.  முக்கிய  சாலைகளின் இடையே உள்ள சுரங்க வழிப்பாதைகள் நீரினால் மூழ்கிக்கிடக்கின்றன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மெரனா கடற்கரையில் தேங்கிய மழை நீரில் மூழ்கி முதியவர் ஒருவர் பலியானார். இவர் யார் என்பது தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.